கவிஞர் பெரு.விஷ்ணுகுமாரின் கவிதைகள் 1 எடிசன் புன்னகைக்கிறார் நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம் அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது அந்த நேரத்தில்போய் சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம் போனால் போகட்டுமென தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும் அதுதான் தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு 2 மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். சரிதான்…. எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகரியமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன் எந்தவித சலனமுமில்லை மேய்ப்பனிட...
Comments
Post a Comment