கவிஞர் சஹானாவின் கவிதைகள்
1
மனதின் அகத்துள்
ஆழ்கடலை
பள்ளத்தாக்குகளை
பாதாளங்களை
மண்ணறைகளை
இடுமுடுக்குகளை
முட்டுச்சந்துகளை
சுடுகாடுகளை
பாம்பு புற்றுகளை
சிலந்தி வலைகளை
கண்ணீர் குளங்களை
வெந்நீர் ஊற்றுகளை
மகிழ்ச்சி குமிழ்களை
பரந்த வெளியினை
பால் வீதியினை
வேற்று கிரகத்தினை
அகம் கொண்ட
இப்பிரபஞ்சத்தின் சிறு மனமே.
2
அலைக்கு மேல் துள்ளும் மீனைப்போல
நீர்க்காகம்
குளித்தலும் பறத்தலுமாக இருக்கிறது
விரிந்த முழுக்குளத்தின் குறுக்குவெட்டாக
நொடிப்பொழுதில் பறந்து செல்கையில்
எல்லைப் பரப்புகள் மாயமாவதை
ஓர் ஓரத்தில் மரமாய் நின்று
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
இலைகள் துளிர்க்கின்றன.
3
ஏ பழுதடைந்த கடிகாரமே
பழுதான நேரத்தை
ஏன் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்
போரடிக்காதா
Comments
Post a Comment