கவிஞர் சஹானாவின் கவிதைகள்


1

மனதின் அகத்துள்

ஆழ்கடலை

பள்ளத்தாக்குகளை

பாதாளங்களை

மண்ணறைகளை

இடுமுடுக்குகளை

முட்டுச்சந்துகளை

சுடுகாடுகளை

பாம்பு புற்றுகளை

சிலந்தி வலைகளை

கண்ணீர் குளங்களை

வெந்நீர் ஊற்றுகளை

மகிழ்ச்சி குமிழ்களை

பரந்த வெளியினை

பால் வீதியினை

வேற்று கிரகத்தினை

அகம் கொண்ட

இப்பிரபஞ்சத்தின் சிறு மனமே.


2

அலைக்கு மேல் துள்ளும் மீனைப்போல

நீர்க்காகம்

குளித்தலும் பறத்தலுமாக இருக்கிறது

விரிந்த முழுக்குளத்தின் குறுக்குவெட்டாக

நொடிப்பொழுதில் பறந்து செல்கையில்

எல்லைப் பரப்புகள் மாயமாவதை

ஓர் ஓரத்தில் மரமாய் நின்று

பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

இலைகள் துளிர்க்கின்றன.


3

ஏ பழுதடைந்த கடிகாரமே

பழுதான நேரத்தை

ஏன் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்

போரடிக்காதா

Comments

Popular posts from this blog